தினகரன் 10.06.2010
52 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது ரூ.10 ஆயிரம் கோடியில் சென்னையில் புதிய நகரம்
வேலூர், ஜூன் 10: ‘சென்னையில் 52 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் நவீன புதிய நகரம் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும்’ என்று வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் கூறினார்.
தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி வாரிய சங்கம் மூலம் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட கடன்கள் வசூலிக்கப்படாமல் உள்ளது. இந்த கடன்களை வசூல் செய்வதற்கான ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
தொடர்ந்து மத்திய அரசின் புதிய திட்டமான பொருளாதாரத்தி பிரதாப் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கடனில் ரூ.1600 கோடி வரை வசூலாகாமல் உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 82 கூட்டுறவு சங்கங்கள் மூலம் 18 ஆயிரத்து 344 பேர் கடன் பெற்றுள்ளனர். இதில் ரூ.138.8 கோடி வசூலாகாமல் உள்ளது. இந்த கடன்கள் அனைத்தும் இம்மாதத்துக்குள் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் வீடு கட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கிராம பகுதிகளில் உள்ள குடிசை பகுதிகளில் வீடு கட்ட ரூ.1.6 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் அரசு ரூ.30 ஆயிரம் வரை மானியமாக வழங்குகிறது. மீதியுள்ள வங்கிக்கடனுக்கு பெறப்படும் வட்டியிலும் 5 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தில் வீடுகள் கட்ட இதுவரையிலும் 35 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் 21 ஆயிரம் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதியுள்ளவை பரிசீலனையில் உள்ளது.
கூட்டுறவு வீட்டுவசதி வாரியம் மூலம் தாராபடவேடு, காஞ்சிபுரம், சென்னை, சேலம், ஈரோடு, மதுரை, கோவை போன்ற இடங்களில் 20 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது. சென்னையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் விரைவில் தொடங்கப்படும்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் வாரியத்துக்கு சொந்தமான இடம், தனியார் இடம் என 52 ஏக்கர் பரப்பளவில் புதிய நவீன நகரம் அமைக்கப்பட உள்ளது. அனைத்து வசதிகளுடன் ரூ.10 ஆயிரம் கோடியில் அமைய உள்ள இந்த புதிய நகரத்தில் தனியார் இடம் தவிர மீதியுள்ள இடத்தில் மட்டும் 6 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளது.
சென்னையின் மெட்ரோபாலிடன் ஏரியாவாக அந்த பகுதி மாற்றப்படும்ல் நலிந்த பிரிவினருக்கு வீடுகள் கட்ட வங்கிகள் கடன் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் கலெக்டர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் கூட்டுறவு வீட்டுவசதி வாரிய சங்கங்களின் பதிவாளரும், வீட்டு வசதிவாரிய நிர்வாக இயக்குனருமான தர்மேந்திர பிரதாப் யாதவ் கலந்து கொண்டு பேசினார். இதில் வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் தனி அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தர்மேந்திர. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.