தினகரன் 15.06.2010
வந்தவாசி நகராட்சியில் வீணாகும் குப்பை அள்ளும் வண்டிகள்
வந்தவாசி, ஜூன்15: வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளது. இந்த 24 வார்டுகளில் 250க்கும் அதிகமான தெருக்கள் உள்ளன. நகராட்சியில் 100க்கும் அதிகமான துப்புரவு பணியாளர்கள் இருக்க வேண்டும்.
ஆனால் 35 துப்புரவு பணியாளார்களே மட்டும் உள்ளனர். இதனால் 8 வார்டுகளை தனியார் வசம் ஒப்படைத்துள்ளனார். மீதம் உள்ள வா£¢டுகளுக்கு துப்புரவு பணியை நகராட்சி பணியாளா¢கள் மேற்கொண்டுள்ளனார்
வா£¢டுக்கு 2 பேரை நியமித்து தினந்தோறும் தெருக்களில் சேரும் குப்பைகளை மூன்று சக்கர தள்ளுவண்டிகளில் பிளாஸ்டிக் டப்பா மூலம் சேகரித்து குப்பை சேமிப்பு பகுதியில் கொட்ட வேண்டும்.
அங்கிருந்து லா£¤ மூலம் குப்பைகளை அகற்ற திட்டமிட்டு அதற்காக கடந்த 4 மாதத்திற்கு முன்னர்ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான தொகையில் 13 மூன்று சக்கர வண்டி மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்கள் வாங்கப்பட்டது. இவை பயன் படுத்தப் படாமல் கடந்த நான்கு மாதங்களாக அச்சரப்பாக்கம் சாலையில் உள்ள மேநீர் தேக்கத்தொட்டி வளாகத்தில் வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகிறது.
நகர மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் பயனற்று போவதற்கு முன்பு குப்பைகளை அகற்ற பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.