தினகரன் 22.06.2010
மதுக்கூர் வளர்ச்சி பணிகளுக்கு ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு
பட்டுக்கோட்டை,ஜூன்22: பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ. ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுக்கூர் காவல்நிலையம் அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை புறவழிச்சாலை அமைக்க ரூ. 7 லட்சம் , மதுக்கூரில் உள்ள இஸ்லாமியர் இடுகாட்டில் இறுதிச்சடங்கு மண்டபம் அமைக்க ரூ. 3 லட்சம், மதுக்கூர் பேருந்து நிலையத்தில் நாற்காலிகளுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.3.50 லட்சம், இடையகாடு கிராமத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.1.60 லட்சம் என மொத்தம் ரூ 15.10 லட்சம் நிதி மதுக்கூர் பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு எம்எல்ஏ ரங்கராஜன் தெரிவித்துள் ளார்.