தினகரன் 28.06.2010
நகராட்சி அலுவலகத்தில் ரூ.11லட்சத்தில் புதிய பூங்கா
திண்டுக்கல், ஜூன் 28: திண்டுக்கல் நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.11லட்சம் மதிப்பில் செயற்கை நீரூற்றுடன் கூடிய புதிய பூங்கா அமைக்கப்படுகிறது. இதற் கான பூமிபூஜை விழா நகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் நடராஜன், நகராட்சி தலைமை பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் பழனியப்பன், உதவிபொறியாளர் அன்னலெட்சுமி உள் பட பலர் கலந்து கொண்டனர்.