தினகரன் 20.07.2010
புதிய பூ மார்க்கெட் விரைவில் திறப்பு
கோவை, ஜூலை 20: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பூமார்க்கெட் வளாகம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. பூமார்க்கெட் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது.
கோவை மாநகராட்சி 48வது வார்டு மேட்டுப்பாளையம் ரோட்டில் பூமார்க்கெட் இயங்கி வருகிறது. பூக்கள் வரத்து அதிகமாக இருப்பதால் கூடுதல் கடை கட்ட மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதனையடுத்து தற்போதுள்ள கடைகளுக்கு எதிரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கடை கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நவீன பூமார்க்கெட் வளாகத்தில் பூக்களை பதப்படுத்தி வைப்பதற்காக குளிரூட்டப்பட்ட நவீன அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
நவீன பூமார்க்கெட் ஒரு வளாகத்தில் 18 கடை களும், மற்றொரு வளாகத்தில் 27 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 100 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாகனம் நிறுத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன பூமார்க்கெட் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. இங்குள்ள கடைகள் ஏலம் விடப்பட்டு விரைவில் திறக்கப்பட இருக்கிறது.