தினகரன் 26.07.2010
நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சிப்பணி
பழநி, ஜுலை 26: நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் ரூ.92 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பழநி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சியின் கூட்டம் அதன் தலைவர் முஸ்தபா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் முருகேசன், துணைத்தலைவர் முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பிற்பட்டோர் மானிய நிதி ரூ.12 லட்சத்தில் சிமெண்ட் தளம், பாலம் கட் டுதல், வடிகால் அமைத்தல் பணிகள், பொதுநிதி ரூ.17 லட்சத்தில் மின் மோட்டார், சின்டெக்ஸ் தொட்டி, குடிநீர் குழாய், ஆழ்குழாய் அமைத்தல், மினி பவர் பம்ப் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
பொதுநிதி ரூ.10 லட்சம், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ரூ.10 லட்சம் மூலம் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நிதி ரூ.50 லட்சத்தில் வணிக வளாகம் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் என ரூ.92 லட்சத்தில் திட்டங்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.