Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருப்பரங்குன்றத்தில் ரூ.3.87 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 28.07.2010

திருப்பரங்குன்றத்தில் ரூ.3.87 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகள் துவக்கம்

நிதி ரூ. 3.87 கோடியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது.

மலைக்குப்பின்புறம் தென்பரங் குன்றம் கல்வெட்டு குகைகோயில் பகுதியில், சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்குமுன், சுற்றுலாதுறை சார்பில் அறுபடை வீடுகள் மேம்பாட்டு திட்டத்தில், ரூ. 25 லட்சத்தில் சிறுவர், அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் நுழைவுக்கட்டணமாக, நான்கு லட்சம் ரூபாய் கோயிலுக்கு வருமானமாக கிடைத்துள்ளது.

புதிய பூங்கா: அந்த பூங்காவை ஒட்டி புதிய பூங்கா அமைக்க 3.87 கோடி ரூபாய், சுற்றுலாதுறை ஒதுக்கியது. அங்கு 36.20 லட்சத்தில் குளம், சுற்றுச்சுவர், நடன நீருற்று. 47.29 லட்சத்தில் திறந்தவெளி கலை அரங்கம், செயற்கை புல் தரைகள், கார்பார்க்கிங் வசதி. 54.29 லட்சத்தில் ரோஸ் கார்டன். 44.61 லட்சத்தில் பேவர்பிளாக் தளம், மயில்கள் தண்ணீர் குடிக்க வசதியாக குடிநீர் தொட்டிகள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் நடக்க உள்ளன.