தினமலர் 29.07.2010
நேப்பியர் பாலம் விளக்கு அலங்காரம் துணை முதல்வர் துவக்கி வைத்தார்
சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில், பார்வையாளர்களை கவரும் வகையில், நேப்பியர் பாலத்திற்கு சிறப்பு அலங்கார மின் விளக்குகளால் ஒளியூட்டும் பணியை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.சிங்காரச் சென்னையின் ஒரு திட்டமாக நேப்பியர் பாலம், 464 சிறப்பு வகை மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, தேவைக்கேற்ப ஒளியின் தன்மையை கட்டுப்படுத்தும் கருவிகளுடன் ஒளியூட்டப்பட்டுள்ளது.நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை 3 கி.மீ., நீளத்திற்கு, 26 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் அழகுபடுத்தப்பட்டது. இதை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மேயர் சுப்ரமணியன், நகராட்சி நிர்வாக முதன்மை செயலர் அசோக் வர்தன் ஷெட்டி, கமிஷனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.