தினமணி 30.07.2010
குடந்தையில் ரூ. 11.40 லட்சத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய முடிவு
கும்பகோணம், ஜூலை 29: கும்பகோணம் நகரில் ரூ. 11.40 லட்சத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் செய்ய நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கும்பகோணம் நகர்மன்ற கூட்டம் அதன் தலைவர் சு.ப. தமிழழகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் என். தர்மபாலன், ஆணையர் பூங்கொடி அருமைக்கண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கும்பகோணம் 33-வது வார்டு திலகர் தெருவில் கழிப்பறையை ஒட்டி அமைந்துள்ள வடிகாலை உயர்த்தி அமைக்க ரூ. 2.50 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது, ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளுடன் கூடுதலாக ரூ. 2.95 லட்சத்தில் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகளை ரூ. 11.40 லட்சத்தில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.