Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு இடம் புதுப்பொலிவு பெறுகிறது வஉசி பூங்கா ரூ.30 லட்சத்தில் நடைபாதை, புல்தரை அமைக்க திட்டம்

Print PDF

தினகரன் 03.08.2010

மாநகரில் முக்கிய பொழுதுபோக்கு இடம் புதுப்பொலிவு பெறுகிறது வஉசி பூங்கா ரூ.30 லட்சத்தில் நடைபாதை, புல்தரை அமைக்க திட்டம்

ஈரோடு, ஆக. 3:ஈரோடு வ..சி. பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடை பாதை மற்றும் புல்தரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் கூடுதலாக இந்த பணிகளை மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த பூங்கா புதுப்பொலிவு பெறுகிறது.

ஈரோடு மாநகராட்சி சார்பில் வ..சி. பூங்கா 1927ம் ஆண்டு முதல் 10 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. ஈரோடு மக்களின் பொழுதுபோக்கு இடமாக இந்த பூங்கா இருந்து வருகிறது. இந்த பூங்காவில் புல்வெளியில் இந்தியா வரைபடம், செயற்கை நீரூற்று மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு சிங்கம், புலி, மான்கள், மயில், அரியவகை குரங்கினங்கள் என்று பல்வேறு வனவிலங்கு சரணாயலமும், குழந்தைகளை கவரும் வகையில் சிறுவர்கள் ரயிலும் இயக்கப்பட்டு வந்தது. நாளடைவில் உரிய முறையில் பராமரிக்காததால் இங்கிருந்த விலங்குகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டதால் விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த கூண்டுகள் வெறிச்சோடியது. மேலும் சிறுவர் ரயிலும் நிறுத்தப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனது. மாநகராட்சி சார்பில் இந்த பூங்கா சரியான பராமரிப்பு இல்லாத நிலை இருந்து வந்தது.

இங்குள்ள செயற்கை நீருற்றும் செயல்இழந்து போனது. பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்த இந்த பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி போனது. பகல் நேரங்களில் போதையில் பலர் பூங்காவில் படுத்து கிடப்பதை காணலாம்.

இந்த பூங்காவை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். இதையடுத்து மாநகராட்சி சார்பில் பூங்காவை மேம்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபாதைகள் அமைக்கும் பணி முடிவடைந்து அழகாக காட்சி தருகிறது. தற்போது புல்வெளி அமைக்கும் பணி நடக்கிறது.