Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ2 கோடியே 21 லட்சம் செலவில் கூவம் கரையோரம் 2 பூங்கா

Print PDF

தினகரன் 03.08.2010

ரூ2 கோடியே 21 லட்சம் செலவில் கூவம் கரையோரம் 2 பூங்கா

சென்னை, ஆக. 3: கூவம் கரையோரம் ரூ2 கோடியே 21 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய பூங்காக்களை துணை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

சென்னை மாநகராட்சி சார்பில் புதுப்பேட்டை, லான்ஸ் தோட்ட சாலையில் கூவம் கரையோரம் புதிய பூங்கா அமைக்கும் பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதி உத்தரவுப்படியும், துணை முதல்வர் ஸ்டாலின் அறிவுரைப்படியும் கூவம் நதி சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி கூவம் கரையோரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதுப்பேட்டை லான்ஸ் தோட்ட சாலையில் தூய ஆண்ரூஸ் பாலம் முதல் ஆதித்தனார் சாலை வரை 730 மீட்டர் நீளத்திற்கு கூவம் ஆற்றின் மேற்பகுதி அழகுபடுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அமைத்தல், நடைபயிற்சி பாதை, கீழ்நிலைத் தொட்டி, மழைநீர் வடிகால்வாய், மின்விளக்குகள், நடைபாதை கள், அழகிய புல்தரைகள், பூஞ்செடிகள் என பல்வேறு வகையான பணிகள் ரூ1 கோடியே 34 லட்சத்து 81 ஆயிரம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சிவானந்தா சாலையில் கூவம் கரையோரம் ரூ86.83 லட்சம் செலவில் அழகிய பூங்கா, நடைபாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய பூங்காக்களையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக துணை முதல்வர் ஸ்டாலின் 4ம் தேதி (நாளை) பகல் 12 மணிக்கு திறந்து வைக்கிறார். இவ்வாறு மேயர் கூறினார். கவுன்சிலர் அப்துல்மஜீத் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். ஸ்டாலின் நாளை திறக்கிறார்