Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர்

Print PDF

தினமணி 03.08.2010

வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட நகர்மன்றத் தலைவர்

தேவகோட்டை, ஆக. 2: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சியில் நடைபெற்ற மக்கள் நல வளர்ச்சித் திட்டங்களை, நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி பார்வையிட்டார். தேவகோட்டை நகராட்சி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான சிலம்பணி வடக்குத் தெருவில் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் அமைக்கும் பணியையும், தாழையூர் கூத்தாடி முத்துப்பெரியநாயகி ஆலயம் அருகே சிறுவாச்சி செல்லும் சாலையில் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தையும், நகர்மன்றத் தலைவர் வேலுச்சாமி மற்றும் ஆணையர் ரவிச்சந்திரன், பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.