Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தினகரன் செய்தி எதிரொலி தி.மலை பிள்ளைக்குளம் ரூ 5 லட்சத்தில் சீரமைப்பு

Print PDF

தினகரன் 04.08.2010

தினகரன் செய்தி எதிரொலி தி.மலை பிள்ளைக்குளம் ரூ 5 லட்சத்தில் சீரமைப்பு

திருவண்ணாமலை,ஆக.4: தினகரன் செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை பிள்ளைக்குளம் ரூ5 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது என்று நகராட்சி தலைவர் இரா.திருமகன் தெரிவித்துள்ளார்.

தி.மலை& செங்கம் சாலையில் பிள்ளைக்குளம் உள்ளது. நகராட்சி சார்பில் இந்த பிள்ளைக்குளத்தை முன்பு ரூ6 லட்சத்தில் சீரமைக்கும் பணி நடைபெற்றது. பின்னர் அப்பணியை அப்படியே விட்டு விட்டனர். இந்த பிள்ளைக்குளம் தற்போது குப்பையும், கூளமுமாக காணப்படுகிறது.

பக்தர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் இந்த பிள்ளைக்குளத்தை சீரமைத்து புதுப்பொலிவு பெறச் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 26ம் தேதி தினகரனில்விரிவாக செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இப்போது இதில் திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி தலைவர் இரா.திருமகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிள்ளைக்குளத்தில் உள்ள குப்பைகள் இன்னும் இரு தினங்களுக்குள் அகற்றப்படும். மேலும் இக்குளம் சுற்றுலா வளர்ச்சி துறை நிதியின் கீழ் ரூ5 லட்சத்தில் அழகுபடுத்தப்படும். மேற்படி பணி விரைவில் செய்து முடிக்கப்படும் என்று கூறி உள்ளார்.

Last Updated on Wednesday, 04 August 2010 11:05