Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் தூத்துக்குடி, நெல்லையில் ரூ372 கோடி திட்டப்பணிகள்

Print PDF

தினகரன் 05.08.2010

துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் தூத்துக்குடி, நெல்லையில் ரூ372 கோடி திட்டப்பணிகள்

நெல்லை, ஆக. 5:தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்க ளில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் பல் வேறு நிகழ்ச்சிகளில் ரூ.372 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிட திறப்பு விழா, சிறப்பு பொருளாதார மண் டலம் அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று தூத்துக் குடி வந்தார்.

மாவட்ட திமுக செயலாளர் பெரிய சாமி தலைமையில் துணை முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்பிக் விருந்தினர் மாளிகை யில் தங்கினார்.

இன்று காலை காலை 10 மணிக்கு தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் ஆயி ரம் மெகாவாட் புதிய மின் நிலைய கட்டுமானப் பணி களை பார்வையிடுகிறார். முத்தையாபுரத்தில் காலை 11 மணிக்கு 5 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா வில் பங்கேற்கிறார்.

மாலை 3.30 மணிக்கு தருவைகுளத்தில் புதிய சமத்துவபுரம், 4.30 மணிக்கு மாப்பிள்ளையூரணியில் ரூ.27 கோடியில் கட்டப்பட்டுள்ள 941 சுனாமி குடியிருப்புகள், 5 மணிக்கு ரூ.5 கோடி யில¢ புதிதாக கட்டப்பட்டுள்ள தூத்துக்குடி மாநகராட்சி கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார். 5.30 மணிக்கு தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் ரூ.171.95 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

இரவு 7.30 மணிக்கு வடக்குகாரசேரி கிராமத்தில் ரூ.500 கோடியில் நிறைவேற்றப்பட உள்ள உணவு பொருள் பதப்படுத்தும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் கார் மூலம் நெல்லை வரும் துணை முதல்வருக்கு நெல்லை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் பாளை. சாரதா கல்லூரி அருகே வர வேற்பு அளிக்கப்படுகிறது.

ஆக.6ம் தேதி காலை 9 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டையில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை திறந்து வைக்கிறார். பின¢னர் டக்கரம்மாள்புரத்தில் அம்பை. ஆறுமுகத்தின் புதிய இல் லத்தை திறந்து வைக்கி றார்.

இதைத் தொடர்ந்து வீரவநல்லூரில் ரூ.3 கோடியில் மத்திய அமைச்சர் நெப்போலியன் கட்டியுள்ள மயோ பதிதசைச்சிதைவு சிகிச்சை மையத்தை துணை முதல்வர் திறந்து வைக்கிறார். கல்லிடைக்குறிச்சி பஸ் ஸ்டாண்டை திறந்து வைக் கும் துணை முதல்வர் அந்த பகுதியில் திமுக ஏற்பாடு செய்துள்ள கொடியேற்று விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

காலை 10 மணிக்கு அம்பாசமுத்திரத்தில் நடக்கும் அரசு விழாவில் ரூ.25 கோடியில் அமைக்கப்படும் குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டி, வி.கே.புரம், மணிமுத்தாறு குடிநீர்த் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 2 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்குகிறார். விழாவில் ரூ.123.37 கோடி மதிப்பிலான பணி களை துவக்கி வைக்கிறார்.

மாலை 4.30 மணிக்கு கடையநல்லூர் அரசு ஆண் கள் மேல்நிலைப்பள¢ளி மைதானத்தில் நடைபெறும் விழாவில் ரூ.21 கோடியில் கடையநல்லூர் குடிநீர் அபிவிருத்தி திட்டம், ரூ.50 லட்சத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம், அச்சன்புதூரில் 110 கே.வி., துணை மின்நிலையம் ஆகிய பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட ரூ202 கோடி

நெல்லை மாவட்டத்தில் 2 நாள் அரசு விழாக்களில் ரூ.78.80 கோடி செலவில் நிறைவடைந்த 447 அரசு கட்டிடங்களை திறந்து வைத்து, ரூ.97.68 கோடி மதிப்பிலான 123 பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26.22 கோடியில் 40 ஆயிரத்து 161 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மொத்தம் ரூ.202.69 கோடி மதிப்பிலான பணிகளை துவக்கி வைக்கிறார்.

3 நாள் நிகழ்ச்சிகள் முழு விவரம் விழாவில் ரூ.60.79 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைக்கிறார். அன்று இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.

7ம் தேதி காலை சங்கரன்கோவில் அருகே அரியநாயகிபுரத்தில் ரூ.2.55 கோடியில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார். பின்னர் களப்பாகுளத்தில் நடக்கும் அரசு விழாவில் ரூ.1.68 கோடியில் கட்டப்பட்ட தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகி றார். விழாவில் ரு.18.53 கோடி மதிப்பிலான திட்டங் களை துவக்கி வைக்கிறார்.

மாலை 4 மணிக்கு நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் முதல் பட்டமளிப்பு விழா வில் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.

விழாவில் ரூ.7.44 கோடியில் அண்ணா பல்கலைக்கழக புதிய கட்டிடம், தூத்துக்குடி, நாகர்கோவில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு தலா ரூ.19.50 கோடியில் புதிய கட்டிட பணி ஆகியவற்றிற்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். இத்துடன் நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்பட்டு செல¢கிறார்.