தினமணி 12.08.2010
பூலாம்பட்டி பேரூராட்சியில் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை
எடப்பாடி, ஆக. 11: பூலாம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளுக்களை எடப்பாடி எம்எல்ஏ புதன்கிழமை துவக்கி வைத்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு | 3.50 லட்சத்தை அடிப்படை வசதிகளுக்காக எடப்பாடி எம்எல்ஏ காவேரி ஒதுக்கினார். பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் ஆகிய பகுதிகளில் தார்ரோடு, மினி மோட்டார் பம்பு ஆகிய அடிப்படை வசதிகளை மேம்படுத்த இத்தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது.
கூடக்கல் பகுதியில் மினி மோட்டர் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் திட்டப் பணியை காவேரி புதன்கிழமை துவக்கி வைத்தார். அவருடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மூர்த்தி, பாமக பூலாம்பட்டி பேரூர் செயலாளர் அங்கமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.