Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சியில், வளர்ச்சி பணிகள் முடக்கம்

Print PDF

தினமலர் 13.08.2010

நகராட்சியில், வளர்ச்சி பணிகள் முடக்கம்

சிவகங்கை: கமிஷனரின் மெத்தனத்தால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளதாக, சிவகங்கை நகராட்சி கூட்டத்தில், தலைவர், கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். தலைவர் நாகராஜன் (காங்.,) தலைமையில் கூட்டம் நடந்தது. கமிஷனர் சுந்தரமூர்த்தி, பொறியாளர் இளங்கோ பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் மணிமுத்து, சூரியநாராயணன், தவமுருகன் (தி.மு..,), சரவணன், சண்முகராஜன் (காங்.,) பேசுகையில், "நகரில் ரோடு அமைத்தல், கழிவு நீர் அகற்றும் பணிகள் கிடப்பில் உள்ளன. இப்பணிகளை கண்காணிக்காமல், கமிஷனர் அடிக்கடி விடுப்பில் சென்று விடுகிறார். வாரச்சந்தை வரிவசூல் உரிமத்தை ஏலம் விடாமல், தனியாருக்கு துணையாக செயல்படுகிறார். மற்ற பணிகளை செய்யாமல், அவரே நேரடியாக சென்று வரி வசூலிக்கிறார். மூன்று ஆண்டுகளாக வளர்ச்சி பணிகள் நடக்காததால், மக்களிடம் தலைகாட்ட முடியவில்லை,' என்றனர். தவமுருகன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். மதியம் 1.30 மணி வரை நடந்த கூட்டத்தில், காரசாரமான விவாதம் நடந்தது. இடையிடையே, கமிஷனர் பதில் அளித்தார்.நகராட்சி தலைவர் கூறுகையில்,"" கமிஷனர் மூன்று ஆண்டுகளாக, வளர்ச்சிப்பணிகளை செய்வதில்லை. எதற்கெடுத்தாலும் விடுப்பில் சென்றுவிடுகிறார். ஊழியர்களிடம் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ரோடு, கழிவுநீர் வசதி, வாரச்சந்தையை ஏலம் விடுதல் உள்ளிட்ட பணிகளை செய்யாவிடில், கமிஷனரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என்றார்.கமிஷனர் கூறுகையில், ""வாரச்சந்தை வரி வசூலுக்கு ஏலம் விடக்கோரி வற்புறுத்துகின்றனர். கடந்த ஏழு முறை டெண்டர் நடத்தியும், அதிகபட்சமாக 5.40 லட்ச ரூபாய்க்கு தான் ஏலம் கேட்டனர். நகராட்சி ஊழியர்களை வைத்து, கடந்த இரண்டு மாதமாக வசூல் செய்தோம். இதில் இதை விட கூடுதல் தொகை கிடைத்தது. இதன்படி, ஆண்டுக்கு சராசரியாக 8.50 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைக்கும். குறைவான தொகைக்கு ஏலம் கேட்பதால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அதற்காக என்னிடம் பிரச்னை செய்கின்றனர்,'' என்றார்.