Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் விடுபட்ட திட்டங்கள் 2012ல் நிறைவேறும்?

Print PDF

தினமலர் 18.08.2010

மதுரையில் விடுபட்ட திட்டங்கள் 2012ல் நிறைவேறும்?

மதுரை:மதுரை மாநகராட்சியில் இந்த ஆண்டு, விடுபட்டுப்போன, பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் திட் டங்கள், 2012ம் ஆண்டில், மத்திய அரசின் நிதி உதவியின் கீழ், நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.நேரு நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், மதுரையில் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இவற்றை பார்வையிட, கும்பகோணம் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் மதுரை வந்திருந்தனர்.

அவர்களிடம் தலைமை பொறியாளர் சக்திவேல் கூறியதாவது:மதுரையின் வளர்ச்சி பணிக்காக, மத்திய மாநில அரசுகள் 2005ம் ஆண்டு 2496 கோடி ரூபாய், நிதி வழங்க ஒப்புதல் அளித்து, அதில் 931 கோடி ரூபாய் வழங்கப்பட்டு பணிகள் நடக் கிறது. குறிப்பாக, வைகை இரண்டாவது குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், வைகையின் குறுக்கே மேலக்கால் மற்றும் மணலூர் பகுதிக ளில் தடுப்பணைகள், குடிசைகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுதல், மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைத்தல் போன்ற பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, சில பணிகள் முடிந்துள்ளன.

வெள்ளக்கல் மற்றும் சக்கிமங்கலம் பகுதிகளில் நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவு கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையம் அமைக்கப்படுகிறது. 2012ம் ஆண்டு, இதே திட்டத்தின் கீழ், பாலங்கள், சாலைகள், சுரங்கப் பாதைகள், வைகை கரையோரம் சாலைகள் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்றார்.