தினகரன் 22.09.2010
கிழக்கு மண்டலத்தில் ரூ 8.75 கோடி பணிகள் துரிதப்படுத்த உத்தரவு
கோவை, செப். 22: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர் சாமி ஆகியோர் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 6வது வார்டில் ரூ8.75 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் நடை பெற்று வருகிறது.
6வது வார்டிற்குட்பட்ட நொய்ல் நகர் பகுதியில் ரூ75 லட்சத்தில் பிரதான மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பண்ணாரி அம்மன் நகர், எம்.ஜி.ஆர். நகர், காந்திநகர், திருவள்ளுவர் நகர், காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி ஆகியவை மொத்தம்
ரூ8.75 கோடி மதிப்பீட்டில் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இப்பணிகளை நேற்று சென்று ஆய்வு மேற் கொண்ட மாநகராட்சி துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர் சாமி ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.