Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒசூர் நகராட்சி எல்லை விரிவாக்கம்: ஆதரவும்,​​ எதிர்ப்பும்

Print PDF

தினமணி 22.09.2010

ஒசூர் நகராட்சி எல்லை விரிவாக்கம்: ஆதரவும்,​​ எதிர்ப்பும்

ஒசூர்,​​ செப்.​ 21:​ ஒசூர் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்வதற்கு ஊராட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. ​ ஒசூர் நகராட்சியுடன் சூசூவாடி,​​ ஆவலப்பள்ளி,​​ மூக்கண்டப்பள்ளி,​​ சென்னத்தூர் மற்றும் மத்திகிரி பேரூராட்சி ஆகிய 5 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து ​ மாநகராட்சியாகத் தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ​ இதனை வரவேற்று ஒசூர் நகரமன்றக் கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திகிரி பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.​ இணைப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.​ திமுக உறுப்பினர்கள் ஆதரவுடன் இணைக்கும் முடிவை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னத்தூர்,​​ ஆவளப்பள்ளி,​​ மூக்கண்டப்பள்ளி,​​ சூசூவாடி ஊராட்சி மன்றக் கூட்டங்களில் அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Last Updated on Wednesday, 22 September 2010 11:42