Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுமுகை பேரூராட்சியில் ரூ. 13 லட்சத்தில்வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 23.09.2010

சிறுமுகை பேரூராட்சியில் ரூ. 13 லட்சத்தில்வளர்ச்சிப் பணிகள்

மேட்டுப்பாளையம்,​​ செப்.​ 22: சிறுமுகை பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்கென ​ரூ. 12.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

​ தனது தொகுதி நிதியிலிருந்து இந்த நிதியை மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்னராஜ் ஒதுக்கீடு செய்துள்ளார்.​ 6-வது வார்டில் ரூ. 50 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம்,​​ 9-வது வார்டில் ரூ. 70 ஆயிரம் செலவில் வடிகால் வசதி,​​ 10-வது வார்டில் ரூ. 65 ஆயிரம் செலவில் கான்கிரீட் சாலை,​​ 1-வது வார்டில் ரூ. 3.25 லட்சம் மதிப்பில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க புதிய கட்டடம்,​​ சிறுமுகைபுதூர் தொடக்கப் பள்ளியில் ரூ. 2 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர்,​​ எலகம்பாளையத்தில் ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்சாலை,​​ சந்தை திடலில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை ஆகிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

​ இதன் தொடக்க விழா மற்றும் பூமி பூஜை,​​ சிறுமுகை தொடக்கப் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.​ வார்டு கவுன்சிலர் சிறுமுகை பாபு தலைமை வகிக்க,​​ ராமமூர்த்தி வரவேற்றார்.​ எம்எல்ஏ ஓகே சின்னராஜ் பணிகளை தொடங்கி வைத்தார்.​ நிகழ்ச்சியில் காரமடை ஒன்றியக்குழு தலைவர் ராஜ்குமார்,​​ பேரூராட்சி செயல் அலுவலர் கல்யாண சுந்தரம்,​​ தலைமை எழுத்தர் முத்துசாமி,​​ வார்டு கவுன்சிலர்கள் சாமிநாதன்,​​ செல்வராஜ்,​​ அதிமுக செயலர் ரேணுகாராஜன்,​​ மாவட்ட கவுன்சிலர் சிவசாமி,​​ கூட்டுறவு சங்க செயலர் சம்பத்குமார் கலந்து கொண்டனர்.