Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி

Print PDF

தினகரன் 04.10.2010

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியில் வளர்ச்சிப்பணி

காரைக்குடி, அக்.4: கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் டாக்டர் ஆனந்த் கூறியதாவது:

கோட்டையூர், சொக்கநாதபுரத்தில் புதிய ரேஷன் கடைகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.30 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ரூ.10 லட்சத்தில் பேரூராட்சி புதிய கட்டிடத்துக்கான பூமிபூஜை, தார்சாலைகள் என ரூ.2 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. சிறப்பு சாலைகள் திட்டத்தில் ரூ.55 லட்சத்தில் 5 சிமெண்ட் சாலை, தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.