தினமலர் 22.10.2010
வி.கே.புரம் பகுதியில் ரூ.15 லட்சம் : வளர்ச்சி பணிகள் துவக்கம்
விக்கிரமசிங்கபுரம்: விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் சுமார் 15 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் துவக்கி வைத்தார்.விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 11வது வார்டில் ரூ.2.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம், ரூ.66 ஆயிரம் செலவில் 20வது வார்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மேல்புறம், 19,18,17,16,15 ஆகிய வார்டுகளிலும், 8வது வார்டு மேலக்கெட்டாரம் போஸ்ட் ஆபீஸ் அருகில் மற்றும் மேலக்கெட்டாரம் பேச்சியம்மன் கோயில் அருகில், 10வது வார்டு டாணா மெயின்ரோடு பகுதியில் மற்றும் பாபநாசம் சேனைத்தலைவர் திருமண மண்டபம் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க்.6வது வார்டு மெயின் ரோட்டில் ரூ.42 ஆயிரம் செலவில் சின்டெக்ஸ் டேங்க், 21வது வார்டு போலீஸ் ஸ்டேஷன் அருகே ரூ.3.07 லட்சம் செலவில் பயணிகள் நிழற்குடை ஆகிய வளர்ச்சி பணிகள் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார். சபாநாயகர் ஆவுடையப்பன் வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து பேசினார்.விழாவில் நகராட்சி இளநிலை அலுவலர் மாணிக்கராஜ், வார்டு கவுன்சிலர்கள் இசக்கிபாண்டியன், சந்திரா, ஜெயலெட்சுமி, பரமசிவன், அற்புதவிஜயா, சொர்ணமாரி, மீனாகுமாரி, திமுக மாவட்ட பிரதிநிதி கணேசன், முத்துராமலிங்கம், சிவந்தியப்பர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், திமுக இளைஞரணி செல்வம், திமுக தொழிற்சங்க செயலாளர் பரணிசேகர், தலைவர் நெடுஞ்செழியன் உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.