தினகரன் 28.10.2010
மணிமுத்தாறில் ரூ.33 லட்சத்தில் வளர்ச்சிப்பணி சபாநாயகர் இன்று துவக்கி வைக்கிறார்
நெல்லை, அக். 28: மணிமுத்தாறு டவுன் பஞ். பகுதியில் ரூ.32.55 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை சபாநாயகர் ஆவுடையப்பன் இன்று (28ம் தேதி) துவக்கி வைக் கிறார்.
மணிமுத்தாறு டவுன் பஞ்சாயத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் ஜெயராமன் தலைமை வகிக்கிறார். விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன் ரூ.32.55 லட்சம் மதிப்பில் வளர்ச்சித் திட்டப் பணிகளை துவக்கி வைத்து 72 பயனாளிகளுக்கு ரூ.59 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழாவில் நகராட்சி தலைவர்கள் அம்பை. பிரபாகரபாண்டியன், வி.கே.புரம் மாரியப்பன், அம்பை. யூனியன் சேர்மன் மீனாட்சி சிவகுருநாதன், மணிமுத்தாறு டவுன் பஞ். தலைவர் முருகன் சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.