Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்செங்கோடு நகராட்சியில் ரூ1 கோடியில் வளர்ச்சி பணி ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினகரன்                 11.11.2010

திருச்செங்கோடு நகராட்சியில் ரூ1 கோடியில் வளர்ச்சி பணி ஆட்சியர் ஆய்வு

நாமக்கல், நவ. 11: திருச்செங்கோடு நகராட்சியில் ரூ1 கோடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் மதுமதி ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனியில் ரூ1.07 கோடியில் மின் மயான தகனமேடை, காத்திருப்போர் அறை, கழிப்பிடம் கட்டுதல், சைக்கிள் நிறுத்துமிடம், ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆட்சியர் மதுமதி ஆய்வு செய்தார். இந்த பணிகளை 30ம் தேதிக்குள் முடிக்க அவர் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து ரூ12 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் சமுதாயக் கூட கட்டுமானப் பணி, ரூ4 லட்சம் மதிப்பில் நெசவாளர் காலனிப் பகுதியில் சாலைகள் மற்றும் சாக்கடைகள் அமைக்கும் பணிகளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் நடேசன், நகராட்சி ஆணையாளர் இளங்கோ, நகராட்சி பொறியாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.