தினமலர் 25.11.2010
மாநகராட்சி விரிவாக்க தீர்மானம் நிறைவேறியது
மதுரை : மதுரை மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, ஒரு வழியாக அரசு நிறைவேற்றி உள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள நகராட்சிகளான ஆனையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பேரூராட்சிகளான ஹார்விபட்டி, திருநகர், விளாங்குடி, ஊராட்சிகளான மேலமடை, உத்தங்குடி, வண்டியூர், நாகனாகுளம், கண்ணனேந்தல், திருப்பாலை, ஐராவதநல்லூர், சின்ன அனுப்பானடி, சிந்தாமணி, புதுக்குளம் பிட், தியாகராஜ காலனி ஆகியவற்றை இணைக்க திட்டமிடப்பட்டது. இதற்குரிய அரசாணை 28.9.10 அன்று வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.