Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தர்மபுரி நகராட்சியில் ரூ1.25 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நகரமன்ற தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                    30.11.2010

தர்மபுரி நகராட்சியில் ரூ1.25 கோடியில் வளர்ச்சிப்பணிகள் நகரமன்ற தலைவர் தகவல்

தர்மபுரி, நவ.30: தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ1.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருவதாக நகரமன்ற தலைவர் தெரிவித்தார்.

தர்மபுரி நகர பேருந்து நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அந்த இடத்தில் வணிக வளாகம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டித்தர முடிவு செய்து தர்மபுரி நகராட்சி நிர்வாகம் ரூ75 லட்சத்தில் பணிகளை தொடங்கியது. அந்த இடத்தில் இருந்த 200க்கும் மேற்பட்ட சிறு காய்கறி வியாபாரிகள் சந்தைபேட்டைக்கு மாற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் பேருந்து நிலையத்தை ஒட்டியே இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருதரப்பிலும் பல்வேறு பிரச்னைகள் உருவாகியது. இதனால் கட்டிடம் கட்டும் பணி குழி தோண்டிய நிலையிலேயே முடங்கியது. இப்பிரச்னை நீதிமன்றம் வரை சென்றது. இப்போது இருவருக்கும் சாதகமான தீர்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் வணிக வளாகம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் கட்ட குழி தோண்டிய இடத்தில் 5 அடி ஆழத்திற்கு மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. அந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு வரும் 1ம் தேதி முதல் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதாக நகரமன்ற தலைவர் ஆனந்தகுமார் ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: நகரப் பேருந்து நிலையம் அருகில் கிடப்பில் கிடந்த வணிக வளாகம் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் பணிகள் வரும் டிசம்பர் 1ம் தேதி பூமி பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். இதுபோன்று, ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் நகராட்சி இடத்தில் ரூ25 லட்சத்தில் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இப்பணி வரும் மார்ச் மாதத்தில் முடிவடையும்.

அதைதொடர்ந்து பேருந்து நிலையத்தில் ரூ25 லட்சத்தில் 16 கடைகள் கட்டப்படுகிறது. வரும் 1ம் தேதி பூமி பூஜையுடன் கட்டுமான பணி தொடங்குகிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் ரூ1.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்(வணிக வளாகம், கடைகள்) நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஆனந்தகுமார் ராஜா கூறினார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடும் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் சிறுவர் விளையாட முடியாத நிலை உள்ளது.

 

Last Updated on Tuesday, 30 November 2010 05:38