Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

Print PDF

தினமலர்            30.11.2010

வடலூர் நகரை அழகுப்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர் : வடலூர் நகரை அழகு படுத்தும் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் கடலூர்-விருத்தாசலம் சாலையின் இருபுறமும் அகலப்படுத்தவும், மண்சாலை பகுதியில் இருபுறமும் மேம்பாடு செய்யவும், வடலூர் நகரை அழகுபடுத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சரின் துரித முயற்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பரிந்துரையின் படி, தமிழக அரசு சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த சாலை பணிகள் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.