Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"உடன்குடி பேரூராட்சியில் ரூ. 8 லட்சத்தில் பணிகள்'

Print PDF

தினமணி             06.12.2010

"உடன்குடி பேரூராட்சியில் ரூ. 8 லட்சத்தில் பணிகள்'

சாத்தான்குளம், டிச. 5: உடன்குடி பேரூராட்சியில் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 8 லட்சம் மதிப்பிலான பணிகள் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து பேரூராட்சித் தலைவர் சாகுல்ஹமீது கூறியதாவது:

திருச்செந்தூர் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பணிகள் செய்ய ரூ. 8 லட்சத்தை, அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதியின் கீழ் புதுமனை பகுதியில் ரூ. 5 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படுகிறது. மீதமுள்ள நிதியுடன், பொதுநிதியைச் சேர்ந்து ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கிறிஸ்தியாநகரம் வடக்குத் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இதேபோல, ரூ. 8 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மானங்காத்த அய்யனார் சாலையும், ரூ. 7 லட்சத்தில் சாதரக்கோன்விளை வடக்கு, தெற்குத் தெரு சாலையும், ரூ. 4 லட்சத்து 30 ஆயிரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலை தெரு, ரூ. 3 லட்சத்து 25 ஆயிரத்தில் நடுக்கடை காலனி சாலை, ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தில் பரதர் தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இவ்வாறு மொத்தம் ரூ. 48 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 2.12 கி.மீ. சிமென்ட் சாலைகள் அமைக்கப்படுகின்றன. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதனுடன் 12-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் பெறப்பட்ட ரூ. 7 லட்சத்துக்கு பல்வேறு பணிகள் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.