தினகரன் 10.12.2010
காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் ரூ85 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிதொட்டியம்
, டிச. 10: தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. தலைவி சுதா தலைமை வகித்தார். துணை தலைவர் சொர்ணாம்பிகை, செயல் அலுவலர் சேகர், உதவியாளர் குணசேகரன், கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வரி மானிய திட்டத்தில் மேல தவிட்டுப்பாளையம் மயானம் சீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ
5 லட்சத்திற்கும், அலுவலக கட்டிட பராமரிப்பு பணிக்கும், சிறப்பு சாலை திட்டம் 2010&11 ஆண்டிற்கு 2 சிப்பம் (பேக்கேஜ்) படி ரூ80 லட்சம் செலவில் தார் சாலை, சிமென்ட் சாலை பணிகள் கூட்டத்தில் அங்கீகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் சரசு, கோவிந்தம்மாள், சுப்பிரமணியன், முருகேசன், சந்திரசேகர், மொமலா, வேலு, மனோகரன், ர.சாந்தி, கு.சாந்தி, பிரகாசம், இந்திரகாந்தி, தாமோதரன் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.