Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.1640 கோடியில்இரண்டாவது திட்டம்

Print PDF

தினமலர்                          29.06.2011

ரூ.1640 கோடியில்இரண்டாவது திட்டம்

மதரை:மதுரையில் மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. 2012ல் இத்திட்டம் முடிகிறது. "ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத்திட்டம்-2,' தொடங்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக 1640 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, போக்குவரத்து, நீர்மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது: 2012ல் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் அடுத்த பாகம் தொடங்கும். இதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளோம் என்றார்.