தினகரன் 08.08.2012
நகர்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.750 கோடி : ஜெ. அறிவிப்பு
சென்னை: ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்ட பணிகளுக்கு, ரூ.750 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னையை தவிர மற்ற மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு, ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு, ரூ.250 கோடி ஒதுக்கப்டும் என்றும் அறிவித்துள்ளார். 15 பேரூராட்சிகளுக்கு அலுவலக கட்டிடம் கட்ட, தலா 40 லட்சம் ரூபாய் வீதம் ரூ.6 கோடி நிதி ஒதுக்கபட்டுள்ளதாகவும், ஜெயலலிதா அறிவித்துள்ளார்.