தினமலர் 23.08.2012
மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு
மதுரை:மதுரை மாநகராட்சி மூலம், ரூ.2.13 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பூங்காக்களை, அமைச்சர் கோகுல இந்திரா துவக்கி வைத்து, போட்டோ கண்காட்சியை பார்வையிட்டார்.மத்திய, மாநில சுற்றுலாத்துறை நிதி உதவியுடன், பெரியார் பஸ் ஸ்டாண்ட் கோட்டைச்சுவர் பூங்கா, மீனாட்சி பூங்கா, திருமலை நாயக்கர் மகால் பூங்காக்கள், புதுப்பிக்கப்பட்டன. இவற்றின் திறப்பு விழாவில், அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, கமிஷனர் நந்தகோபால், துணை மேயர் கோபாலகிருஷ்ணன், மண்டலத்தலைவர் சாலைமுத்து, வேலைக்குழுத் தலைவர் கண்ணகி, நகர் பொறியாளர் மதுரம், நகரமைப்பு அலுவலர் ராக்கப்பன், உதவி அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.