Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி 12.11.2009

வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

போச்சம்பள்ளி, நவ.12: ஊத்தங்கரை பேரூராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே..சண்முகம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

ஊத்தங்கரையில் விளையாட்டு மைதானம், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பேரூராட்சித் தலைவர் ஜெயலட்சுமி மகாலிங்கம், உதவி இயக்குநர் ருக்குமணி, பேரூராட்சி செயல் அலுவலர் சடையப்பன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, பெருமாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Last Updated on Friday, 13 November 2009 09:22