தினமணி 25.11.2009
ரூ.10 கோடியில் திட்டப் பணிகள் திறப்பு
செங்கல்பட்டு, நவ. 24: செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் பகுதியில் ரூ.10 கோடியில் தொடங்கப்பட்ட திட்டப் பணிகள் நிறைவுபெற்றதையடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
இதற்கான விழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நகர்மன்ற உறுப்பினர் சசிகலா ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கு திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி, செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர்கள் கோபிகண்ணன், ரகுபதி, மீனா, அரிநாதன், பிரகாஷ், கஸ்தூரி, பன்னீர், அமுதா, ஜோதீஸ்வரி, ரவிக்குமார் உள்ளட்டோர் கலந்துகொண்டனர்.
ரூ.5.42 கோடியில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை நகர்மன்றத் தலைவர் சசிகலா ஆறுமுகம் திறந்துவைத்தார்.
ரூ.2.98 கோடியில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை திருப்போரூர் சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி திறந்துவைத்தார்.
ரூ1.7 கோடியில் அமைக்கப்பட்ட சாலையை திருக்கச்சூர் ஆறுமுகம் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார். இதே போல ரூ.35 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 கோபுர விளக்குகள், சாலை நடுவில் பொருத்தப்பட்டுள்ள 38மின் விளக்குகளின் சேவைகளும் தொடங்கிவைக்கப்பட்டன.
இவை மட்டுமல்லாமல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும், அவை விரைவில் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் நகர்மன்றத் தலைவி கூறினார்.