Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வலங்கைமான் பேரூராட்சியில் ரூ. 6 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Print PDF

தினமணி 25.11.2009

வலங்கைமான் பேரூராட்சியில் ரூ. 6 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

நீடாமங்கலம்,நவ. 24: வலங்கைமான் பேரூராட்சியில் 12வது மானிய நிதிக் குழுத் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று பேரூராட்சித் தலைவர் க. குமரன் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியின் மூலம் வலங்கைமான் பேரூராட்சியில் செப்பளம் குளம் சமன்படுத்தும் பணி, வரதர் குளத் தெரு தார்ச் சாலை அமைக்கும் பணி, உப்புக்காரத் தெரு வடிகால் சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அவர்.

அப்போது, செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி, துணைத் தலைவர் சோம. மாணிக்கவாசகம், 2-வது வார்டு உறுப்பினர் ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 25 November 2009 06:38