Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒட்டன்சத்திரத்தில் நலத் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

Print PDF

தினமணி 2.12.2009

ஒட்டன்சத்திரத்தில் நலத் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை

ஒட்டன்சத்திரம், டிச. 1: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் உள்ள 18-வார்டில் 1 கோடி செலவில் நலத் திட்டப் பணிகள் செய்ய அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி தலைமையில் செவ்வாய்கிழமை பூமிபூஜை நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் பேரூராட்சியில் உள்ள 1-வது வார்டு வசந்த் நகரில் ரூ.6.30 லட்சம் செலவில் தார்ச் சாலை அமைக்கவும்,9-வது வார்டு தென்றல் நகரில் ரூ.7.90 லட்சம் செலவில் வடிகால் மற்றும் சிறுபாலம், சிமெண்ட் சாலை அமைக்கவும் மற்றும் பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தார்ச் சாலை, சிமெண்ட சாலை,வடிகால் அமைக்க அந்த்ந்த வார்டுகளில் பூமி பூஜை நடைபெற்றது.

விழாவுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்கொடி தலைமை வகித்தார். பேரூராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் அரசு தலைமைக் கொறடா அர.சக்கரபாணி கலந்து கொண்டு நலத் திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தார்.

விழாவில் பேரூராட்சிக் கவுன்சிலர்கள் ராமராஜ்,ஆனந்தன்,மயிலாத்தாள் ராசியப்பன்,ஜின்னா,கிட்டான்,சின்னம்மாள் கோபால்,பி.கே.முருகேசன்,நாட்ராயன்,சந்திரமோகன்,திருமலைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.