தினமலர் 31.12.2009
கும்பகோணம் நகராட்சி பகுதியில் ரூ.40 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்
கும்பகோணம் : கும்பகோணம் நகராட்சி பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது. இந்நகராட்சியின் கூட்டம் தலைவர் தமிழழகன் தலைமையில் நடந் தது. ஆணையர் பூங்கொடி, நகரமைப்பு அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்: நகர்ப்புற ஏழைகளுக்கு வீடுகட்ட மானியத்துடன் கூடிய விகிதத்தில் கடன் வழங்க மத்திய அரசு வழிகாட்டுதல்களை அளித்துள்ளது. அதனடிப்படையில் வீடு கட்ட கடன் வேண்டுவோர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலக்காவேரி காமராஜர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள பழைய சிதலமான கூரை கட்டிடத்தை ஏலம் விட்டு இடித்து அப்புறப்படுத்தப்படும். அதில் புதிய கட்டிடம், சைக்கிள் நிறுத்தும் கூடாரம், சுற்றுச்சுவர் உயர்த்துதல், சிறுநீர் கழிப்பி டம் கட்டும் பணி மற்றும் மராமத்து பணிகள் ரூ.24 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் செய்யப்படும். பெருமாண்டி சுடுகாட் டின் உட்புறத்தில் ரூ.4.50 லட்சத்தில் சிமென்ட் தளம் அமைக்கப்படும். காந்தியடிகள் சாலையில் அமைந்து உள்ள மார்னிங் ஸ்டார் பள்ளி அருகே மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் ரூ.85 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்படும். முத்துக்கிருஷ்ணன் நகர், நாதன் நகர், ஆனைக்காரன் பாளையம் பகுதிகளில் தொடர் மழையால் பாதிக் கப்படுகிறது. எனவே மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் ரூ.7.50 லட்சம் மதிப்பில் அமைப்பதென்ற தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறாக மொத்தம் ரூ.40 லட்சத்தில் நகரில் வளர்ச்சிப் பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது. சென்னையில் இருந்து திருச்சி வரையிலான மெயின் லைனில் முன்பு இயக்கப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டுமென மத்திய அரசுக்கு நகராட்சி சார்பில் தீர்மானம் இயற்றி அனுப்ப வேண்டு மென கவுன்சிலர் லெட்சுமி நாராயணன் கொடுத்த கோரிக்கை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.