Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரச்சலூர் பேரூராட்சியில் ரூ.4.30 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமணி 07.01.2010

அரச்சலூர் பேரூராட்சியில் ரூ.4.30 லட்சத்தில் திட்டப் பணிகள் துவக்கம்

ஈரோடு, ஜன. 6:ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சிப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலம் ரூ.4.30 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அரச்சலூர் நவரசம் கல்லூரி முன் ரூ.2 லட்சத்தில் வடிகால் வசதி, நல்லமங்காபாளையத்தில் ரூ.80 ஆயிரத்தில் நெடுங்கிணறு தடுப்புச் சுவர், மீனாட்சிபுரத்தில் ரூ.1.50 லட்சத்தில் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி ஆகியவை கட்டப்படுகிறது. இப்பணிகளை மொடக்குறிச்சி எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி துவக்கி வைத்தார். அரச்சலூர் பேரூராட்சித் தலைவர் சுலோசனா சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். அவல்பூந்துறை பேரூராட்சித் தலைவர் குணசேகரன், காங்கிரஸ் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் முத்துக்குமார், பேரூர் தலைவர் சூர்யாவடிவேல், காங். நிர்வாகிகள் சீதாபதி, பாலசுப்ரமணியம், ஞானசேகரன், பேரூராட்சி துணைத் தலைவர் குழந்தைசாமி, செயல் அலுவலர் தங்கவேல், கவுன்சிலர்கள் குப்புசாமி, கோமதி, ஆனந்தன், திமுக பேரூர் செயலர் கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 08 January 2010 07:53