தினமணி 21.01.2010
ரூ.47 லட்சத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்
செங்கல்பட்டு, ஜன. 20: செங்கல்பட்டை அடுத்த திருப்போரூரில் பணிகள் நிறைவடைந்த ரூ.47 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகளை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.
÷ரூ. 27 லட்சத்தில் அமைக்கப்பட்ட 2 குடிநீர் கிணறுகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை அவர் தொடங்கிவைத்தார். மேலும், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்படும் 2 குடிநீர் தேக்கத் தொட்டிக்கான பணிக்கு அடிக்கல்நாட்டி பேசுகையில் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை தேசிய அளவில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் முதல்வர் கருணாநிதிதான் என்றார்.
÷திருப்போரூர் பேரூராட்சித் தலைவி செல்வி தேவராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவி விஜயலட்சுமி கிருஷ்ணன், துணைத் தலைவர் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், திருப்போரூர் ஒன்றியச் செயலர் ரோஸ் நாகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.