Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.47 லட்சத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்

Print PDF

தினமணி 21.01.2010

ரூ.47 லட்சத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள்

செங்கல்பட்டு, ஜன. 20: செங்கல்பட்டை அடுத்த திருப்போரூரில் பணிகள் நிறைவடைந்த ரூ.47 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகளை தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார்.

÷ரூ. 27 லட்சத்தில் அமைக்கப்பட்ட 2 குடிநீர் கிணறுகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை அவர் தொடங்கிவைத்தார். மேலும், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்படும் 2 குடிநீர் தேக்கத் தொட்டிக்கான பணிக்கு அடிக்கல்நாட்டி பேசுகையில் குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை தேசிய அளவில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர் முதல்வர் கருணாநிதிதான் என்றார்.

÷திருப்போரூர் பேரூராட்சித் தலைவி செல்வி தேவராஜன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவி விஜயலட்சுமி கிருஷ்ணன், துணைத் தலைவர் ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன், திருப்போரூர் ஒன்றியச் செயலர் ரோஸ் நாகராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Last Updated on Thursday, 21 January 2010 10:34