தினமலர் 18.02.2010
நிலக்கோட்டையில் ரூ.50 லட்சத்தில் பணிகள்
நிலக்கோட்டை:நிலக்கோட்டை பேரூராட்சியில் ரூ. 50 லட்சத் தில் வளர்ச்சி பணிகள் செய்ய முடிவு செய்யப் பட்டுள்ளது.நிலக்கோட்டை பேரூராட்சி கூட்டம் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் உதயகுமார் முன் னிலை வகித்தார். செயல் அலுவலர் சக்தி வேல் வரவேற்றார். கூட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 50 லட்ச ரூபாய்க்கு பணி தேர்வு செய்தல், சிமென்ட் ரோடு, சுற்றுச்சுவர், வடிகால், சமையல் கூடம் அமைத் தல் ஆகியவற் றிற்கு 15 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. சுகாதார ஆய்வாளர் தர்மர் நன்றி கூறினார். உதவியாளர் மேகநாதன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.