Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருச்சி சாலையில் பூங்கா பணி துவக்கம்

Print PDF

தினமணி 19.02.2010

திருச்சி சாலையில் பூங்கா பணி துவக்கம்

கோவை, பிப்.18: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி திருச்சி சாலையில் பூங்கா, நிரூற்றுகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை துவக்கப்பட்டது.

திருச்சி சாலை, புறவழிச்சாலை சந்திப்பு சுங்கம் பகுதியில் இப்பணியை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பைந்தமிழ் பாரி துவக்கிவைத்தார். மலர்ச் செடிகள், நீரூற்றுகள், புல்வெளி, தெரகோட்டா பொம்மைகள், கண்கவரும் அலங்கார விளக்குகள் உள்ளிட்டவை ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளன.

இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல ஆணையர் லட்சுமணன்,செயற்பொறியாளர் கணேஷ்வரன், நகரமைப்புக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.