தினமலர் 26.02.2010
அரசு திட்டப்பணிகள் கரூரில் ஆய்வு கூட்டம்
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான சத்யகோபால் தலைமை, அரசுத் திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. கரூர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை, கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் திட்டம், பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை, நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், பாதாள சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அரசின் திட்டப்பணிகளை எவ்வித தவறுமின்றி, விரைவாகவும், முறையாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென மாவட்ட கண்காணிப்பாளர் சத்யகோபால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். டி.ஆர்.ஓ., முனிரத்தினம், டி.ஆர்.டி.ஏ., திட்ட அதிகாரி கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்