தினமலர் 10.03.2010
விக்டோரியா ஹால் புதுப்பிக்கும் பணி துவக்கம்
சென்னை : விக்டோரியா பப்ளிக் ஹால் புதுப்பிக்கும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், மிகவும் பழமை வாய்ந்த விக்டோரியா பப்ளிக் ஹால் உள்ளது. இதை, மூன்று கோடியே ஆறு லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது.விக்டோரியா பப்ளிக் ஹால், 38 சதுர நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்த பழைமை வாய்ந்த கட்டடத்தில், மரத்தினாலான மேற்கூரையின் சில பகுதிகள் பழுதடைந்துள்ளன.அவற்றை, பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியும், தரைத்தளம், முதல் தளம் சீரமைக்கும் பணியும், சிதிலமடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணிகளும், ஜன்னல்கள் மற்றும் கதவுகள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.இந்த புனரமைப்பு பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்.தலைமைச் செயலர் ஸ்ரீபதி, நேற்று நேரில் வந்து புதுப்பிப்பு பணிகளை ஆய்வு செய்தார். குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, மாநகராட்சி கமிஷனர் ரஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் உடனிருந்தனர்