தினமணி 10.03.2010
காஸ் இணைப்பு இல்லாத புதிய ரேஷன்கார்டு தாரருக்கு மண்ணெண்ணெய் விநியோகம்
கோவை, மார்ச் 9: சமையல் காஸ் இணைப்பு இல்லாத புதிதாக ரேஷன்கார்டு பெற்றவர்களுக்கு மார்ச் மாதத்துக்கு மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
÷மாவட்ட தலைநகரம், நகராட்சி, பேரூராட்சிப் பகுதியை உள்ளடக்கிய நகரப்புறங்களில் வசிக்கும் காஸ் இணைப்பு இல்லாத அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கும் 3 லிட்டருடன், கூடுதலாக 2 லிட்டர் அதிகரித்து வழங்கப்படும்.
÷நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் உள்ள அட்டைதாரர்கள், கிராமங்களில் காஸ் இணைப்பு இல்லாதவர்கள், ஒரு சிலிண்டர் உள்ள அட்டைதாரர்களுக்கு தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
÷மாவட்ட ஆட்சியர் பி.உமாநாத் இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.