தினமலர் 12.03.2010
பள்ளி கட்டட திறப்பு விழா
காரைக்குடி: எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலைப்பள்ளியில், 50 லட்ச ரூபாயில் கட்டப்பட்ட கட்டட திறப்பு விழா நடந்தது.வளர்ச்சிக் குழு தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். செயலாளர் பெரியணன் முன்னிலை வகித்தார். தியாகராஜா மில் அதிபர் கருமுத்து கண்ணன் திறந்து வைத்தார். குன்றக்குடி பொன்னம் பல அடிகள், இந்தியன் ஆயுள் காப்பீட்டு கழக முன்னாள் செயல் இயக்குனர் லட்சுமணன், நகராட்சி தலைவர் முத்துத்துரை பேசினர். பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம், உறுப்பினர் பழனிவேலு, எஸ்.எல்.என். நாராயணன் செட்டியார், வித்யா கிரி பள்ளி முதல்வர் சுவாமிநாதன், தலைமை ஆசிரியர் வள்ளியப்பன், உதவி தலைமை ஆசிரியர் ஹென்றிபாஸ்கர், பங்கேற்றனர். முத்துபழனியப்பன் தொகுத்து வழங்கினார். அறக்கட் டளை நிர்வாகி நாராயணன் நன்றி கூறினார்.