தினமலர் 12.03.2010
நாகையில் புதிய பள்ளி கட்டட திறப்பு விழா
நாகை: நாகப்பட்டினம் சர் அகமது தெரு முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு விழா நடந்தது.நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மாரிமுத்து, கவுன்சிலர்கள் ரெஜினாபேகம், பாரூக்ராஜ், பொறியாளர் பாக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சித்தலைவர் சந்திரமோகன் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசுகையில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நகராட்சி கல்வி நிதி 2007–08ம் ஆண்டின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் திறமையாக கல்வி கற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.தலைமை ஆசிரியை சந்திரா நன்றி கூறினார்.தொடர்ந்து நாகை மருந்துகொத்தளம் ரோட்டில் எஸ்.ஜெ.எஸ்.ஆர்.ஒய் திட்டத்தின் கீழ் 2008-09ம் ஆண்டில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும் நகராட்சித் தலைவர் சந்திரமோகன் திறந்து வைத்தார்.