தினமலர் 19.03.2010
அண்ணாமலைநகர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
சிதம்பரம்: அண்ணாமலைநகர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட் டம் சேர்மன் கீதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன், துணைத் தலைவர் முன் னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பேரூராட்சி பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்கு, பூங்கா, பொது கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சீருடைகள், பேரூராட்சிக் குட்பட்ட வெள்ளக்குளத் தில் நவீன கழிப்பிடத் திற்கு புதிய மின்மோட்டார் மற்றும் கொத்தன்குடிதோப்பில் நவீன கழிப்பிடத்திற்கு புதிய ஆழ்துளை கிணறு மற்றும் மின் மோட்டார் வாங்க முடிவு செய்யப்பட்டது.