தினமலர் 29.03.2010
ஜெய் நகரில் வளர்ச்சி பணி தீவிரம்
திருப்பூர் : நல்லூர் நகராட்சி, 13வது வார்டு ஜெய்நகர் பகுதியில் 23 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடக்கின்றன.நகராட்சியில் மண் ரோடாக இருந்த, இரண்டு ரோடுகளுக்கு தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. 13வது வார்டு, ஜெய்நகர் கிழக்கு ஐந்தாவது வீதி விரிவு ரோடு, எம்.எல்.ஏ., நிதியில் ஐந்து லட்சம் மதிப்பில் தார் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. ஜெய்நகர் ஐந்தாவது வீதி ரேஷன் கடை எதிரில் உள்ள ரோடு, 4.30 லட்சம் மதிப்பில் தார் ரோடாக மாற்றப்படு கிறது. ஜெய்நகர் கிழக்கு முதலாவது வீதியில் 4.70 லட்சம் மதிப்பில் ஒரு புறம்; நான்காவது வீதியில் 9.90 மதிப்பில் இருபுறம் வடிகால் வசதி அமைக்கும் பணி நடக்கிறது. ஜெய்நகர் பகுதியில் 23.90 லட்சம் மதிப்புள்ள பணிகள் நடக்கின்றன.