Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

30 நாட்களில் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்கப்படும்: ஆணையர் தகவல்

Print PDF

தினமலர் 29.03.2010

30 நாட்களில் மனைப்பிரிவு ஒப்புதல் வழங்கப்படும்: ஆணையர் தகவல்

ஓசூர்: ''ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் மனைபிரிவுக்கான ஒப்புதல் மற்றும் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதி விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும்,'' என நகர ஊரமைப்பு ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார். ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் மனைபிரிவுக்கு ஒப்பதல் மற்றும் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதி பெறுதல் குறித்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நகர ஊரமைப்பு ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் நடந்தது. கலெக்டர் சண்முகம் முன்னிலை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து 20 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பரிசீலனை செய்த ஆணையர் தகுயுடைய மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்க எடுத்து 3 நாட்களுக்குள் பதில் வழங்க உத்தரவிட்டார்.

ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் நிருபர்களிடம் கூறியதாவது: ஓசூர் புது நகர் வளர்ச்சி குழும அலுவலகத்தில் மனைபிரிவுக்கு ஒப்புதல் மற்றும் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதி பெறுதல் குறித்து நிலுவையில் உள்ள விவரங்களை அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும். விண்ணப்பங்கள் பெறும்போது அதில் போதிய ஆவணங்கள் உள்ளதா என்று சரிபார்த்து அதற்கான அத்தாட்சி கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும்.

விண்ணப்பித்த 30 நாட்களுககுள் மனைபிரிவுக்கு ஒப்புதல் மற்றும் கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதி வழங்கப்படும். ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும நிதி 7 கோடி ரூபாய் உள்ளது. ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் பூங்கா மற்றும் நடைபாதை அமைக்கவும் 2 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்ப கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் தலைமையில் மாதம் ஒரு முறை ஓசூர் புதுநகர் வளர்ச்சி குழும பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் நடத்தப்படும். ஓசூரை சுற்றியுள்ள பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத வீட்டுமனை பகுதியில் வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்க இயலாது. இதனை முறைபடுத்தி அரசு ஆணை பிறப்பித்த பிறகு மனு செய்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட மனை பிரிவுகளில் கட்டிடங்கள் கட்ட சமர்பிக்கும் வரைபடங்களுக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஓசூர் புதுநகர்வளர்சி குழும உறுப்பினர் செயலர் யோகராஜ், தாசில்தார் முனிராஜ், மத்திகிரி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Monday, 29 March 2010 06:18