தினமலர் 01.04.2010
கோபாலசமுத்திரம் கண்மாய் ரூ.10 லட்சத்தில் சீரமைப்பு
திண்டுக்கல் : கோபாலசமுத்திரம் கண்மாய் 10 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது.திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி பின்பகுதியில் உள்ள கோபாலசமுத்திரம் கண்மாயில் கழிவுநீர் தேங்கி உள்ளது. நகராட்சி சார்பில் இந்த கண்மாய் கரை உடைக்கப்பட்டு கழிவுநீரை வெளியேற்றி, தூரெடுத்து புதிய கரை அமைத்து மழைநீரை சேமிக்கவும், வாக்கிங் செல்ல வசதியாக கரையினை அகலப்படுத்த 10 லட்சம் ரூபாயில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் கண்மாய் புதுப்பொலிவு பெறும் என நகராட்சி தலைவர் நடராஜன் தெரிவித்தார்.